நாட்டில் இன்றையதினம் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. | |
அதன்படி இலங்கையில் இதுவரை 316 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்து. | |
கொழும்பு, கடுவலை மற்றும் அங்குறுவாதோட்டை பகுதிகளைச் சேர்ந்த மூவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். | |
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 38, 68 மற்றும் 69 வயதானவர்கள் எனத் தெரிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், உயிரிழந்தோரில் 2 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது | |
இதேவேளை, இன்றையதினம் நாட்டில் 837 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை 60174 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி |
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
